 |
கட்டுரை
மேடை ஜெயபாஸ்கரன்
இதுவரை
இருபது முறைகளுக்கு மேல்
எதிரிகளை
''எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்''
என்றாய்
சலனமற்றுக் கிடந்த
உன் ஆதரவாளர்களின்
முன்னிலையில்
''நான் சொல்லிக் கொள்வது
என்னவென்றால்''
என்பதைத் தாண்டி
எதுவுமே விளங்கவில்லை
நீ சொல்லிக் கொண்டது
எதுவும்
''இன்னொன்றையும்
குறிப்பிட்டாக வேண்டும்'' என்று
பலமுறை அறிவித்தாய்
ஆயினும்
ஒருமுறைகூட
குறிப்பிடவில்லை
அந்த 'இன்னொன்றை'
''இறுதியாக ஒன்றைச் சொல்லி''
விடைபெறுவதாக முழங்கினாய்
அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டுப் போயிருக்கலாமல்லவா நீ?
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|