 |
கட்டுரை
பொன்னாடை ஜெயபாஸ்கரன்
குளித்துவிட்டு
தலை துவட்டினேன்.
தலைமுடியில்
சிக்கி சீரழிந்தது
சரிகை வேலைப்பாடு.
தரையில்
விரித்துப் படுத்தேன்
தடுக்கப்பட்டது
தரை தந்த சுகம்.
போர்த்திக் கொண்டு
பால் வாங்கப் போனேன்
இதழ் பிரியாமல் சிரித்தான்
எதிர் வீட்டுக்காரன்.
மேசை மீது விரித்து
தொலைக்காட்சிப் பெட்டியை
தூக்கி வைக்க்லாமென்றால்
அவையிரண்டையும்
வாங்கியாக வேண்டும்.
என்னத்தான் செய்வது
ஏகோபித்த
கரவொலிக்கிடையே
எனக்குப் போர்த்தப்பட்ட
பொன்னாடையை?
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|