 |
கட்டுரை
நறுமணம் ஜெயபாஸ்கரன்
நுகர நேரும்போதெல்லாம்
எனது சுவாசத்தை
நிலை குலையச் செய்து விடுகின்றன,
விதம் விதமான நறுமணங்கள்.
ஏற்க இயலாத நாற்றமொன்றின்
சமாதியாகத்தான் உணர்கிறேன்
என்னை கடந்து போகும்
சில சட்டைகளில் இருந்து
வீசும் நறுமணத்தை.
உடம்பிலிருந்து
ஊற்றெடுக்கும் நாற்றமே
மேலானதாக இருக்குமென
நினைக்க வைக்கிறது
சில உடைகளின் மீது
ஊற்றிக் கொண்டு வரப்பட்ட
வாசம்.
ஒப்பனையின்
கடைசி வேலையாக
வலுக்கட்டாயமாகப் பீய்ச்சியடித்து
நிறைவேற்றி வைக்கிறார்கள்,
நறுமணத்திற்கும்
துர்நாற்றத்திற்குமான
வாழ்கை ஒப்பந்தத்தை.
தமது
எண்ணங்களின் மீது
நறுமணம் பீய்ச்சுவதாகவே
எண்ணத் தோன்றுகிறது,
எனக்குத் தெரிந்த சிலர்
செண்ட் அடித்துக் கொள்ளூம்போது.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|