 |
கட்டுரை
சுலபம் ஜெயபாஸ்கரன்
அறிமுகம்
உண்டெனினும்
பார்க்காததுபோல்
சிலரைக் கடந்து
போய்விடுவதுண்டு நான்.
இவ்வாறாக
என்னைக் கடந்தும்
போகக்கூடும் சிலர்.
பார்த்தும்
பார்க்காததுபோல்
நடித்துவிட்டுப் போவதில்
எந்த சிரமமும் இருப்பதில்லை
எனக்கும்
எனது சில நண்பர்களுக்கும்.
பேசிக்கொள்ள
விரும்பாதவர்கள்.
மெளனமாக
போய்விடுவதுதான்
மனதுக்கு நிம்மதி
மொழிக்கும் பாதுகாப்பு.
எனினும்
தவிர்க்க முடியாத
சில சூல்களில்,
பேச ஒப்பாதவர்களோடு
பேச வேண்டியிருப்பதை
காட்டிலும்
சுலபமாகத் தானிருக்கும்
அந்தப் பாவிகளுக்கு
நண்பனாகவே
வாழ்ந்துவிட்டுப் போவது.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|