 |
கட்டுரை
ஒரு துளியாய் இளந்திரையன்
ஒற்றைச்
சபலத்தின்
ஓர வெடிப்பில்
விம்மிப்பரவும்
பெருவெளியில்
ஒரு துளியாய்
மூடிய
சிப்பியின்
முதுகில் வழியும்
நீர்த் தாரையாய்
நீளும்
கற்பங்களை
நிமிர்த்திக்
கழியும்
பிரயத்தனத்தில்
பகலும் இரவும்
பாதித்
தூக்கமும்
பசியுமான
விளங்கமுடியா
மர்மத்தின்
முடிச்சில்
காலடி தெரியா
கற்பத்தின்
இருட்டைப்போல்
காலக்
கணிதத்தின்
கழித்தலிலும்
கூட்டலிலும்
சுற்றிச் சுழலும்
புழுவைப்போல
நகர்ந்து போக
நீள்கிறது
வாழ்க்கை.
- இளந்திரையன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|