 |
கட்டுரை
எப்போதோ பாடிய பாட்டு... கோவி. லெனின்
வயலோரம் வரப்போரம்
வருஷம்பூரா
காத்திருப்பேன்
உயிரே நீ வரவேணும்
உன் மனசை தர வேணும்.
பாதிநிலா தேய்ஞ்சிருக்கு
பவுர்ணமிக்கு நாளிருக்கு
மீதிநிலா பார்க்கோணும்
நீ முக அழகு
காட்டோணும்.
செவ்வல்லி பூத்திருக்கு
சிறுகுளமும்
நெறைஞ்சிருக்கு
உம்மனசில் பூத்தேனா?
உசிரெல்லாம்
நெறைஞ்சேனா?
களத்து மேட்டு மேல
காத்திருப்பேன்
கனவுமென்னு.
வனத்து மான் போல
துள்ளி வந்து பதில்
சொல்லு
ஆமான்னு சொன்னீன்னா
அரவணைச்சு
கைப்பிடிப்பேன்
வேற பதில் சொல்ல
வந்தா
ஆவியத்துப்
போயிருப்பேன்.
- கோவி. லெனின்([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|