 |
கட்டுரை
ஆசையின் திசையிலே சுரேஷ்
ஆசையின் திசையிலே
வீசிய புயலில்
தள்ளப்பட்டேன் வேலையில்
பணம் காய்க்கும் பாலையில்
வந்த நாள் முதலாய்
சொந்த பந்தம் மறந்து
இந்த நாள் வரை என்
இன்பங்களும் மறைந்தன
சுமைகள் கூடியே
சுகங்களும் போயின
இமைகள் மூடியும்
தூக்கமும் போயின
இன்று போவேன் நாளை போவேன்
என்று நாளும் வார்த்தை வந்தன
எத்தனை நாளை போயின பின்னும்
போதும் என்ற மனமே வராமல் போயின
ஆசையின் திசையிலே
வீசிய புயலில்
தள்ளப்பட்டேன் வேலையில்
பணம் காய்க்கும் பாலையில்
புயல் ஓய்ந்த வேளையில்
கரை திரும்ப பார்கிறேன்
நரை தெரிந்த பின்பும்
கரை தெரியவில்லை
- சுரேஷ் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|