 |
கவிதை
பாத்திரத்தில் இல்லை... பிச்சினிக்காடு இளங்கோ
இன்னும்
ஒரு மாயையில்தான்
உலகம் இயங்குகிறது
காலத்திற்கேற்ப
மாயையின் பெயர்
மாறியிருக்கிறதேயொழிய
மாயை மாறவில்லை
ஏதோ ஒரு
தனிச்சாயம் பூசிக்கொண்டு
தனித்து நிற்பதாய்
மனப்பாலில் மயங்கி
மனக்குரங்கு
முடியாமைக்கும்
பற்றாக்குறைக்கும்
குறைபாட்டிற்கும்
தாராளமின்மைக்கும்
தனிச்சாயம்
தனித்து நிற்கவே உதவும்
தனித்தன்மைக்கு உதவாது
பரிமாறுவதிலே இருக்கிறது
பரிணாமம்
பாத்திரத்தில் இல்லை
பாத்திறத்திலும் இல்லை
- பிச்சினிக்காடு இளங்கோ ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|