 |
கவிதை
மலட்டு நதி பிச்சினிக்காடு இளங்கோ
ஓடிக்கலக்கும் நதிகளால்
நலங்கள் இல்லை
ஓடிக்கொண்டிருப்பதால்
வளங்கள் இல்லை
கலந்துவிட்டபின்
காணாமற்பாவதற்கா பயணம்?
எங்கேயாவது நின்று
நிதானித்து
திசைமாற வேண்டாமா?
திசைமாற்ற வேண்டாமா?
பயனற்றும்
அர்த்தமற்றும்
பாய்ந்துகொண்டிருப்பதால்
காலத்தின் கையில்
என்ன இருப்பு?
வானம்
பார்த்துக்கொண்டே இருக்கும்
காற்றும்
வீசிக்கொண்டே இருக்கும்
இரவுப்பகல் ஆடையை
உடுத்தி அவிழ்ப்பதில்
ஒன்றுமில்லையே
கிளைவெடித்துக் கைவிரிப்பதும்
கைகாட்டுவதும் அவசியம்
அப்போதுதான் ஈரமாகி
ஏதேனும் முளைக்கும்
காணாமற்போவதற்கா
இந்தக்கண்விழிப்பு?
தேடாமல் தொலைவதற்கா
இந்தத் தீரும்பயணம்?
நந்தவனங்கள்
மிஞ்சட்டும்
- பிச்சினிக்காடு இளங்கோ ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|