 |
கட்டுரை
என் வெளி..... பிச்சினிக்காடு இளங்கோ
என் வீடு
என் வீட்டறைகள்
எனக்கே உரித்தான
அறைகளெல்லாம்
எனக்கான சுதந்தரத்துடன்
இல்லை.
ஜன்னல்களை
விருப்பம்போல் திறந்துவைக்க முடியவில்லை
காற்று
விழுந்தென்னைப் புணர்வது
தடுக்கப்பட்டுவிட்டது
ஆகாய வைரங்களைக் காணாமல்
கரையும்பொழுதுகளால்
கனக்கிறது மனம்
என் சுதந்தரவெளி
யாருடைய எல்லைக்குள்ளோ
இருப்பது அறிந்து
அமைதியிழக்கிறது அந்தரங்கம்
நான்குபுறமும்
முளைத்துக்கொண்டே உயரும்
கழுகுகள்
என் சூரியனையும்
சந்திரனையும்
பறித்துக்கொண்டன
நான்
என் சுதந்தரம்
எப்படி சுதந்தரமாக?
- பிச்சினிக்காடு இளங்கோ ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|