 |
கட்டுரை
எல்லாம் வாத்துக்களே பிச்சினிக்காடு இளங்கோ
வாத்துக்கூட்டங்களில்
சில
அன்னங்களைப் பார்த்தேன்
என்றது தவறு
வாத்துக்கள்
வாத்துக்களே
எல்லாம் வாத்துக்களே
என்றிருந்துவிட்டால்
எந்த அவஸ்தையும் இல்லை
வாத்துக்கள்
அன்னங்களாக
முகம்காட்டும் வேளையிலும்
அன்னங்கள்போலத்
தோன்றியத் தருணத்திலும்தான்
கணக்குத் தவறாகிப்போனது
எல்லாம் வாத்துக்களே
என்பதில்
எத்துணை நிம்மதி...!
- பிச்சினிக்காடு இளங்கோ ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|