 |
கட்டுரை
காப்பாற்று கிளியே புகாரி
அற்புதச் சிற்பவிழி
பூஞ் சிற்றிடைப் பேரெழிலி
கற்பனைச் சிற்பியின்
முற்றிய நற்றமிழ்
ஏற்றிய தீபவொளி
எனைச் சுற்றிவா சிற்றருவி
சந்தனத்தில் நீராடி
நந்தவனப் பூச்சூடி
வந்துநிற்கும் என்தேவி
என் உயிரின் உயிரும் நீதான்டி
காலைப்பனி ஈரத்திலே
சேலைவனப் பூந்தளிரே
வாழையாய் நீயசைய
உயிரைக் கிள்ளுதடி
உன்னை
மாலையாய் அள்ளியணிய
கைகள் துள்ளுதடி
ஊருறங்கும் நேரத்திலே
யாருமற்றத் தீவினிலே
போர் தொடுக்கும்
உந்தன் நினைவில்
தீயாகிப்போனேன்
என்னைக்
கார் கூந்தல் மழை பொழிந்து
காப்பாற்று கிளியே
- புகாரி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|