 |
கட்டுரை
உன் குரல் புகாரி
கடுந்தாகச் செவிவிழுந்து
நடுநாசி முற்றமேறி
கனவுக் கனல்வீசித்
தீய்ந்த என் விழிகளுக்குள்
தமிழமுதாய்ச் சிதறி
நாவடித் தேனூற்றுகளை
அதிரடியாய் உடைத்து
பட்டமரத் தேகமெங்கும்
பனிப்புல்லாய்ச் சிலிர்த்து
துயர் மேயும் இதயத்தின்
திறவாக் குகைக்குள்ளும்
தித்திப்புக் கனிரசமாய்
இறங்கி
வளர்முத்த வெறிகொட்டும்
உயிர் வெள்ள நயாகரா
- புகாரி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|