 |
கட்டுரை
கண்ணீரை.. உலகமயமாக்கு.. பாலசுப்ரமணியன்
காட்டில் குருதியைக் குடிக்கும்
அட்டையை சுட்டுகொளுத்துவோம்
நாட்டில் நம் ரத்தத்தை உறிஞ்சும்
குட்டிகொசுவையும் கொல்லுவோம்
அடுத்தவன் நாட்டில், பெருவல்லரசும்
அதிரடியாய் புகுந்து, அதற்கும் நியாயம்
உலகுக்கு கற்பித்து , எரிஎண்ணெயையும்
உயிரையும் குடிக்கும் கொடுமையையும்
ஜனநாயம் பேசும், பணநாயகம் பாடும்
இனப்படுகொலை தினம் பல செய்யும்
மனசாட்சி அற்றவரைக் கண்டிப்போம்
என காத்தரினா, ரீட்டா, வில்மா மட்டும்
நூறுகோடி மக்கள் நாம் இருந்தும்
போறாத நிலத்தடி நீர்வளத்தையும்
கூறு போட்டு உறிஞ்சுபவரையும்
யாரு தட்டிக்கேட்பது என்போம்
நதியை இணைக்க சும்மா பேசுவோம்
வறுமையை தாராள மயமாக்குவோம்
தண்ணீரை தனியார் வசமாக்குவோம்
கண்ணீரை உலக மயமாக்குவோம்!
- பாலசுப்ரமணியன் (BalaSubramanian@ZAMILSTEEL.com)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|