 |
கட்டுரை
நெருப்பு விதை அழகிய பெரியவன்
ஒப்பிட முடியாத என்
தகப்பனே
என் பாதங்கள் இடறியபோது
கைப்பிடித்து நடையைத் தொடரச்செய்தவனே
நான் வறுமைக் கோட்டை
உன் வயிற்றிலே பார்த்தேன்
உன் அம்மணத்தையே
நான் உடுத்தினேன்
அம்மா சொல்லியிருக்கிறாள்
எனக்கு படிப்பு எதற்கு என ஆண்டை கேட்டபோது
நீ ஆத்திரப்பட்டதாய்
உன் கோடாரியின் வேகத்தையும்
உன் கலப்பையின் கூர்மையையும்
கண்டிருந்தும் அவன்
உனக்குக் கோபம் வராதென்று
எண்ணியிருக்கலாம்
உன் உக்கிரத்தின்
உருவமாய்
இப்போது நான் தெரிவேன்
உயர்த்திய என் கைகளிடம்
இரக்கம் யாசிக்கவோ
என் தோள் துண்டின் தயவுக்கோ
என் பேனாவின் கருணைக்கோ
அவன் ஒரு நாள்
என்னிடம் வருவான்
அப்போது அவனை
உன் கோபம் சுடும்
என் கையெழுத்தினால்
அவன் காரியங்களெல்லாம்
தீட்டுப்படும்
- அழகிய பெரியவன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|