 |
கவிதை
மார்க்ஸ் சொன்னது பொருந்தாது க.அருணபாரதி
கனவுக்கும் காற்றுக்கும்
கட்டுப்படாத என்மனம்
உணவாக உட்க்கொண்டது
உன் நினைவை
மட்டும் தான் பெண்ணே...
சினங் கொண்டு
சித்திரமாய் நீ முறைத்த
பார்வையிலும் கூட
அதை ரசித்து மனம்வெதும்பி
சிரித்தேனே பெண்ணே.......
தினமும் உன்னை
தித்திக்க நினைத்துவாழ்
உயிரினமாய் நான்,
எப்பொழுது மாறினேன்
தெரியவில்லை பெண்ணே....
எனக்காக என் வாழ்வில்
நீ தந்த மாற்றங்கள்
உனக்காக என் வாழ்வை
தர நினைத்தால் ஏமாற்றங்கள்..
மனக்கணக்கு விதியை
யாரேனும் மாற்றுங்கள்....
மாற்றம் ஒன்றே
மாறாதது..
மார்க்ஸ் சொன்னது
பொருந்தாது...
- க.அருணபாரதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|