 |
கட்டுரை
பிரிவின் சித்திரம் த.அகிலன்
எனக்கும்
உனக்குமான இடைவெளி
பிரிவின் சொற்களால்
நிரம்புகிறது
உதிர்ந்து விழும்
நட்சத்திரத்தின் பேரோசை
பிரிவின் காலடியில்
மௌனித்து வீழ்கிறது.
தாகித்தலையும்
நதியின் தடங்களில்
நான் வரைந்து கொண்டிருக்கிறேன்
நம் பிரிவின் சித்திரத்தை.
- த.அகிலன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|