 |
கட்டுரை
எறும்புகள் உடைத்த கற்கள் த.அகிலன்
வலி
உணரும் தருணங்களில்
எங்கிருந்தோ முளைக்கிறது
எனக்கான கவிதை
காற்றழிந்த
மணல்வெளியில்
காத்திருக்கும்
என்காலடி
காற்றில் அழிவதற்காய்
நான்
கானலை அருந்த
தயாராகையில்
எப்படியாவது
காப்பாற்றிவிடுகிறது மேகம்
எனக்குத் தெரியும்
கடித்துவிடுகிற
கடைசிநொடி வரைக்குமே
புகழப்படும் எறும்புகள்
ஆனாலும்
எறும்புகளிற்கு
கவலைகிடையா
எதைக்குறித்தும்
என்
வழியெங்கும்
நிறுவிக்கிடக்கிறது
எறும்புகள் உடைத்த
கற்கள்
- த.அகிலன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|