 |
கட்டுரை
கனவுகளில் நுழையும் பூனை த.அகிலன்
அழுதுவடியும்
விளக்கு
தோற்றுப்போகிறது
இருளிடம்
எங்கும்
நிரப்பிக்கொண்டேயிருக்கிறது
இருள்
தன்னை.
ஒளியற்றவெளியில்
பதுங்கிக்கிடக்கும்
உன்
புன்னகை
ஒரு திருட்டுப்பூனையைப்போல்
நுழைகிறது
கனவுகளில்..
அதன்
கால்களில்
இடறி
கறிச்சட்டியைப்போல்
நொறுங்கும்
என் தூக்கம்
- த.அகிலன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|