 |
கட்டுரை
காலடிகளைத் தின்கிற காற்று... த.அகிலன்
நீ என்னிடம் தந்துபோன
சிலமுத்தங்களும்
புன்னகைகளும்
மட்டும் எனக்குப்
போதுமானதென்று
உனக்கு யார் சொன்னது...?
என் ஆயுளைத் தின்கிற
உன்
நினைவுகளின் காலடி
ஓசையற்று நகர்கிறது
தொலைவிற்கு...
உனக்கான கடிதங்கள்
எழுதப்படாமலேயே
எனக்குள் இறந்தன
கவிதைகளும்...
நீளும் தொலைவுகளை
நெருக்கத் திராணியற்று
நெளியும் என் வாழ்வு..
இப்போது
உன் காலடிகளையும்
தொலைவிற்கு
செலுத்துகிறது காற்று
மழையைப்போல
நிரந்தரமற்றிருக்கும்
நமது பிரிவு
அதைப்போலவே
அழுத்தமானதும்
கவனிக்கச்செய்வதும் கூட
- த.அகிலன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|