 |
கட்டுரை
புன்னகை விற்பவள் த.அகிலன்
நதி
அதன் புன்னகையை
ஒழிக்கிறது
கடல்மடியில்
அவள்
அனாசயமாய்
அதை எடுத்துச்சூடுகிறாள்
தன் கழுத்தில்
நிலவு
வானில் வரையும்
அவள்
கைகளிற்குச் சிக்காத
ஒளியின் புன்னகையை
அவள் என் புன்னகையை
விற்றுக் கொண்டிருக்கிறாள்...
தான்
நட்சத்திரங்களை
உதிர்ப்பதறியாது
ஒரு
பூவின் புன்னகை
செத்துக் கொண்டிருக்கிறது
அவள் கூந்தலில்
- த.அகிலன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|