 |
கட்டுரை
பள்ளிப்படை கோவில் ஆதவா
மேற்கூரை சுமையினைத்
தாங்கமுடியாத மண்டபத்தூணருகே
தூங்கி வழியும் கோட்டான்களின்
நிழலசைவை ரசித்தபடி
வடிந்து கிடந்தது பகல்நிலவு
சிதிலமடைந்த மேற்புறச் சுவர்முட்டும்
காட்டுமரத்தின் கிளையொன்று
ஆகமவிதிகள் எழுதிய இலக்கணத்தை
மாற்றியமைத்துக் கொண்டிருந்தது
கல்லிடுக்குகள் சிதைந்து
தூணிட்ட முத்தம் தவிர்த்து
இணையில்லா இதழ் பிரித்து
யார் மீதும் எப்போதும்
விழத் தயாராக இருந்தது
கோவிலுறுப்புகள்
இருட்டும் சூன்யமும்
ஒன்றையொன்று
முட்டிக் கொண்டிருக்கும்
கருவறையின் வெற்றிடத்தை
பறவைகளின் புழுக்கைகள்
நிரப்பிக் கொண்டிருக்க
யாருக்கோ ரகசியத்தைக்
கசிய வைத்தபடி காத்திருக்கிறது
பள்ளிப்படை கோவில்
- ஆதவா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|