 |
கவிதை
கவிஞனின் மனைவி ஆதவா
எனது கணவரின் கவிதைகள்
இசங்கள் எனும் அடர்ந்த காடுகளில்
விளைந்தவை
குறியீட்டுக் காய்கள் முளைத்து
செழித்து வளர்ந்தவை
அவரைப் போன்றே
அவைகளும் மூர்க்கமானவை
எனக்குள் ஒவ்வொருமுறையும்
அவர் திணிக்கும்பொழுதெல்லாம்
வாசிப்புத் திணறலில்
என் நுகர்தலின் வாயில்
குதறப்பட்டிருக்கிறது
என் மனநிலையை பங்கப்படுத்தி
காணும் இடமெல்லாம் கவிதையாக்கியது
அவரது கவிதைகள்
என்னைச் சுவைத்த அவைகளின் தாகம்
இன்னும் தீரவில்லை.
அவர் இன்னும் நிறுத்துகிறார்போலில்லை
அவரது கவிதைக்கான மரணத்தை
ஒவ்வொரு காகிதத்திலும் எதிர்பார்க்கிறேன்
அவைகளோ பல்கிப் பெருகி
என்னை வதம் செய்வதில் உறுதியாக இருக்கின்றன
இன்று அவருக்குப் பாராட்டு விழா.
அவரைச் சுற்றி பல்வேறு கவிதைகள்
வட்டமடித்துக் கொண்டிருந்தன.
அவை ஒன்றுக்கொன்று
தான் தின்ற கதைபேசி அலைந்தன
என்னருகே வெறிதெளித்த கவிதையொன்று
என்னைக் காறி உமிழ்ந்து கொண்டிருந்தது.
என்னைப் போன்றே பலரையும்.
- ஆதவா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|