 |
கட்டுரை
எண்ணப்புலனின் பெருஞ்சுவற்றில் ஆதவா
எண்ணப்புலனின் பெருஞ்சுவற்றில்
முட்டி மோதி உடையும்
கருத்துச் செறிவே!
பிரவேசிக்கிற கணத்தில்
கைக்கெட்டா காதலாய்
கனிந்து நிற்கிறாய்
எடுத்துண்ண இயலா ஊணை
கண்களில் காட்டி
உதட்டை ஈரமாக்குகிறாய்
நாவால்.
மதிலேறி உட்புகுந்து
மனதடைய வேண்டுமெனில்
மனிதம் ஒதுக்கும் நின்னை
மாண்புமிகு கருத்தே!
தேடிப் புணரவைத்தல்
கலைஞனுக்கழகல்ல.
கடைவிரித்துக் காத்திரு
அன்றி
பத்தினி வேடமிட்டு
பகலில் உறங்காதே!
- ஆதவா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|