 |
யாழன் ஆதி கவிதை
(இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது மூண்ட கலவரத்தின் பயங்கரம் இது. மார்கிரேட் புரூக் என்ற பெண்மணி இப்புகைப்படத்தை எடுத்துள்ளார். 'ரோலி புக்ஸ்' வெளியிட இருக்கிற நூலில் இப்படம் இடம் பெற்றுள்ளது)
உயிர்களைக் கொத்தித்
தின்றது மதவெறி
மனிதர்களின் பிணங்கள் மீதமர்ந்து
வாசிக்கப்படுகின்றன வேதங்கள்
ஒற்றுமை எனும் போலிப்பேச்சின்
உருவம் திரண்டது
பிணக்குவியலாய்
தின்று விளையாடிய தெருவின்
மண்ணிலே
அழுகி நாறின உடல்கள்
தீர்வுகளின் தாகங்களை மறைத்து
மதங்களின் வேட்கையை
தணித்துக் கொண்டனர்
உயிர்களைக் குடித்து
லெபனான், ஈராக், இலங்கை, இந்தியா...
உலகின் எம்மூலையிலும்
மதங்களால் அறுக்கப்படுகின்றன
மனிதச் சங்குகள்
ஒருவழியாய்
எல்லோரும் செத்தபின்னரே
கிடைக்கிறது பேரமைதி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|