 |
யாழன் ஆதி கவிதை
உழைப்பின் ஈரம்காயா
வடுக்கள் நெளியும் கைகள்
கிளம்புகின்றன
உழைத்து வாங்கிய கூலியோடு
கதாநாயகர்களின்
உயர்ந்த உருவங்களின் மீது பாலூற்ற
நட்சத்திர போதை தலைக்கேற
கிறங்கடிக்கும் ரசிகனின் அறிவீனத்தில்
உயர்கிறது நடிகனின் அந்தஸ்து
சிறந்த எழுத்தாளன்
சிறந்த விஞ்ஞானி
சிறந்த இயக்கவாதி என்றில்லை
சிறந்த நடிகன் போதும்
நாட்டரசியலுக்கு
திரையரங்க இருள்வெளியில்
தொலைக்கப்படுகின்றன விழிகள்
கூத்தாடிகளைக் கும்பிடும்
கைகளாகி பலியாகின்றது அறிவு
கிடா வெட்டி
கற்பூரம் கொளுத்தி
திரையில் காசு வீசி
தன் உழைப்பை அவனுக்கு
கறுப்புப் பணமாக்கி
வெளியேறுகிறான் ரசிகன்
"உடல் மண்ணுக்கு
உயிர் ரஜினிக்கு''
அப்ப உங்க ஆத்தாவுக்கு?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|