 |
யாழன் ஆதி கவிதை
சொல்லின் அடுக்குகள்
தீப்பற்றி எரிகின்றன
புல்லின் நுனிகளும்
பேராயுதங்கள் ஆகின்றன
இன்னும் நிகழும்
அவமானங்களின் அதிகரிப்பில்
மண்ணில் மனிதர்களை சமமாய்
மதிக்க வேண்டும் என்றவரை
கல்லில் சிலையான பின்பும்
கயவர்கள் அவமதிப்பதை
எண்ணில் நெஞ்சம்
எரிமலையாய் வெடிக்குதடா!
விழிகளின் சிவப்பில்
சேகரித்த நெருப்பில்
மொழியினைத் தோய்த்து
தாளினை எரிக்கின்றோம்
உங்கள் உயிரினை நினைத்து!
புரட்சியாளர் சிலையல்ல
அதுவெங்கள் எழுச்சி அடையாளம்
திரட்சியுற்ற
சாதியழிப்புச் சமரின் படைக்கலம்!
விடுதலைப் போரிது எனில்
வெடிகிடங்கு எமதுடல்
படுகளம் வா உனக்கது
உயிரினின்று விடுபடல்
அதைவிடுத்து
சிலையிடம் என்னடா
சிறுசெயல் செய்திடல்?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|