கடவுளும் மதமும்
கடந்த செப்டம்பர் 10ஆம் நாள் திராவிட இயக்கத் தமிழர் பேரவை காஞ்சி மாவட்ட இளைஞர் அணி சார்பில் சமூக அரசியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதில் “கடவுளும் மதமும்” என்ற தலைப்பில் நமது பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் அவர்கள் வகுப்பு எடுத்தார்கள். “சமூகநீதி” என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் ஹாஜாகனி அவர்களும், “ஈழ வரலாறு” என்ற தலைப்பில் நமது இயக்கத்தின் வடக்கு மண்டலச் செயலாளர் அன்புத்தென்னரசன் அவர்களும் வகுப்பு எடுத்தார்கள். தோழர் எழில் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காஞ்சி மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் தோழர் இ.இளமாறன் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.
துரை.செந்தாமரைக்கண்ணன், மு.மாறன், இரா.செந்தில், த.மு.மு.க மாவட்டச் செயலாளர் யாக்கூப், ம.அய்தர் அலி, ம.இளஞ்சித்திரன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் தோழர் வீரக்கனல் நன்றி கூறினார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|