புத்தக புதிர் பத்து
1. “கண்ணகி” நாவலின் ஆசிரியர் யார்?
2. “மக்கள் சேவையில் மலர்ந்த தோழர் - என். வரதராஜன்” எனும் வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர் யார்?
3. அங்கிள் சாம்க்கு மண்ட்டோ எழுதிய கடிதங்களை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
4. யாருடைய நேர் காணல்கள் “பேச்சரவம் கேட்டிலையோ” எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன?
5. பதிப்புலக முன்னொடி சக்தி வை.கோவிந்தன் குறித்த நூலின் ஆசிரியர் யார்?
6. திருக்குறளையும் - நானோ தொழிற் நுட்பத்தையும் இணைத்து எழுதப்பட்ட சிறுவர் அறிவியல் நாவல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. நாவல்? நாவலாசிரியர்?
7. “வாசிப்பு மற்றும் தேர்வு முறையின் அரசியல்” எனும் நூலின் ஆசிரியர் யார்?
8. தூத்துக்குடி மாவட்டம் இடை சேவலில் பிறந்து ஒன்றாக வளர்ந்து எழுத்தாளராகி சாகித்ய அகாடமி விருது பெற்றவர் இருவர். ஒருவர் கி. ராஜநாராயணன். மற்றொருவர்?
9. “நதியின் மடியில்” புதினத்தின் அசிரியர்?
10. அஜயன் பாலாவுக்கு தமிழக அரசு பரிசு வாங்கித் தந்த புத்தகம் எது?
விடைகள்
1. சு. தமிழ்ச்செல்வி
2. க. பாலபாரதி
3. ராமாநுஜம்
4. தமிழச்சி தங்கபாண்டியன்
5. பழ. அதியமான்
6. சர்க்கஸ் டாட் காம், நாவலாசிரியர் இரா. நடராசன்
7. பாலாஜி சம்பத்
8. கு. அழகிரிசாமி
9. ப. ஜீவகாருண்யன்
10. உலக சினிமா வரலாறு-மவுன யுகம்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|