 |
இதுதான் மதச்சார்பின்மையா?
துணை முதல்வர் பொறுப்பு ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ‘மெட்ரோ ரயில்’ திட்ட தொடக்க விழாவில் பார்ப்பன புரோகிதர்கள் வேதம் ஓத - அதை துணை முதல்வர் பயபக்தியோடு வணங்கி ஏற்க திட்டம் தொடங்கியதாம்.
இதேபோல், தமிழக அரசு புதிதாக கட்டி வரும் சட்டசபைக் கட்டிடத்துக்கு “பூமி பூஜை” போடப்பட்டு அமைச்சர்கள் பார்ப்பன வேத புரோகிதர்கள் முன் பயபக்தியுடன் நின்றார்கள்.
பா.ஜ.க.வின் ‘இந்துத்துவா’ ஆட்சியில் நடப்பதுபோல் தி.மு.க. ஆட்சியிலும் சடங்குகள் நடக்கின்றன. இது தான் மதச்சார்பின்மை ஆட்சிக்கான இலக்கணமா? அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றக் கோரி அண்ணா போட்ட உத்தரவை - அவரது நூற்றாண்டில்கூட செயல்படுத்தக் கூடாதா?
அலுவலக வளாகங்களில் கோயில் கட்டுவதுகூட அதிகரித்து வருகிறது. தி.மு.க. தனது கொள்கை அடையாளங்களை கைவிடுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
மதச்சார்பின்மைக்கு எதிரான இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|