தகர்ப்பதே கைமாறு... அ.சி. சின்னப்பத்தமிழர்
பிழைக்க வந்தாய் நிலைக்க நாடென்று
குலைக்க குதர்க்கம் செய்வது அறியாமை...
ஈழத் தீவு தமிழரின் தேசம்
நாளும் வேழமாய் பிளிர்வதைப் பாரு...
ஒரியா தேசத்து விசயனின் தலைமையில்
சிறிய கூட்டம் ஏதிலியாய் நுழைந்தது
ஈழம் இலங்கை - சிரிலங்கா ஆனது
ஞாலத்து வரலாற்றை நன்குணர்ந்து பாரு...
பாண்டியன் சேரன் சோழன் ஆண்ட
மண்ணை தமிழ்நாடு என்று சூட்டாமல்
பிரிட்டீசு நரிகள் சென்னை மாகாணமாக்கி
பிரிட்டீசு இந்தியாவில் அடைத்தது வரலாறு...
ஈழநாட்டு தமிழ்நாட்டு மக்கள் வெள்ளையன்
ஈட்டிமுனை ஆட்சியை நொறுக்கி எழுந்தனர்
பார்ப்பானும் சிங்களவனும் கைகோர்த்து நிற்கிறான்
பாரதம் இலங்கைப் பகைக்குக் கைமாறு.
தாய்நாட்டு விடுதலைக்கு பேயாய் இருக்கும்
ஓநாய்கள் கழுகுகள் வல்லரசியக் கைக்கூலிகள்
வீணாய் எழுதிப் பேசிடும் வீணர்கள்
தானாய் அடங்காது தகர்ப்பதே கைமாறு...
ஆட்சியில் இருக்கையில் அடக்கி ஒடுக்குவான்
வீழ்ச்சி யுற்றதும் மொழியின நலன்பேசுவான்
ஆரிய இந்திய திராவிட மாயையில்
வீழ்த்தும் கயவரையும் ஒழிப்பதே கைமாறு...
|