நாத்திகம் போற்றிடுவாய்
தேவ.சீனி. சுந்தரம்
கல்விகற்க விடுவதில்லை,
கண்ணியமாய் நடப்பதில்லை
சொல்லில் மயக்கிடுவார்,
சுகம்காண விரும்பிடுவார்,
பெண்களைப் போற்றிடுவார்,
பெண்மையை மிதித்திடுவார்,
ஆண்களால் எல்லாமே
அகிலத்தில் நடப்பதாய்,
உண்மையை மறைத்திடுவார்,
உத்தமனாய் நடித்திடுவார்,
எண்ணத்தில் எழுச்சியும்,
ஏற்றமும் விழிப்புணர்வும்,
எப்பொழுதும் வேண்டும்,
இல்லையேல் அடிமை தான்,
அப்போதும் ஆரணங்கு
அரசியலில் வந்தாலும்
எடுப்பார் கைப்பாவை
என்றென்றும் இழுக்கே!
சிந்தித்து முடிவெடுத்து
சீர்திருத்தம் பெண் கொண்டால்,
சிகரமாய் வாழலாம்,
சீலத்தில் உயரலாம்,
தாலி சுகத்திலே தாசியாய் வாழ்வதாய்
போலிகள் கணவனாய்
பொல்லாங்கு செய்வாரே,
சதியாலே கொன்றொழித்த
சதிகாரர் வீழ்ந்திடவே,
சாதி ஒழிப்பினில்
சரித்திரம் படைப்பாய்,
சாமி மதமெல்லாம்
சமுதாய நோயாகும்,
புராணப் புளுகினில் புரண்டு எழாமல்
புரட்சியைப் படைப்பாய்,
புதுமையை மேற்கொள்வாய்,
நம்பாதே சோதிடம்
நாடிடு பகுத்தறிவை,
நன்மைகள் பெற்றிட
நாத்திகம் போற்றிடுவாய்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|