என்று மாயும் இந்த அவலம்?
சி.விநாயகமூர்த்தி
துகில் உரிதல் எனும் கொடுமை
அன்று தோன்றிய
ஆபாசப் புராணங்களில் மட்டுமல்ல
இன்றைய நாளில் வெவ்வேறு வகையில்
கண் முன்னே தொடர்கிறது...
நெஞ்சம் வெடிக்கிறது!
வணிக இதழில் வரையும் படங்களில்
தூரிகையால் துகிலுரிந்து
அரை நிர்வாணம் ஆக்குவதும்
தொலைக்காட்சிக் குத்தாட்டத்தில்
ஆடைக் குறைப்பில் ஆட விடுவதும் கூடவே
பொலியழகு மின்னும் கவிதைகளெல்லாம்
பாதாதி கேச வர்ணனையென்று
ஆடைக்குள் ஊடுருவி
உள் அங்கம் காட்டவும் மறப்பதில்லை
ஈன்ற தாயை, இனிய மனையாளை
இக் கோலத்தில் கண்டால்
மனது துடிக்குமே... அது போன்றே
பொங்கியெழ வேண்டாமா....?
பெண்ணினத்தின் அவலம்
மாய்ந்தொழிய வேண்டாமா?
|