விரட்டடா தோழா!
கவிஞர் தமிழேந்தி
கொலைகார காங்கிரசைக் கூண்டோடு அழிக்கின்ற
கொள்கையில் முரணில்லை தோழா - அதன்
குரல்வளை தன்னைக் குத்திக் கிழிப்பதில்
கொஞ்சமும் தப்பில்லை தோழா !
மலைமலை யாய்அங்கு மாத்தமிழ் மக்களை
மாய்த்திட்ட கொடியவன் தோழா - இன்று
மடிப்பிச்சை ஏந்தி வாக்குக்கு வருகிறான்
மண்கவ்வச் செய்திடு தோழா !
கொன்று விட்டோமாம் நேருவின் பேரனைக்
கூப்பாடு கொஞ்சமோ தோழா - இவன்
கொன்றானே அமைதிப் படைஎன்ற பேரிலே
கொடுமையும் கொஞ்சமோ தோழா !
வென்றாலும் தோற்றாலும் போலித் தேர்தலால்
விடிவில்லை அறிவோம் தோழா - எனில்
வீணரின் கூட்டத்தை வெட்டிச் சாய்த்திட
விசைகொண்டு போராடு தோழா !
நம்மக்கள் பணத்திலே வாங்கிய கருவியால்
நம்மக்கள் அழிவதோ தோழா - அந்த
நரிராச பக்சே கேட்டுக்கு இங்குள்ள
நாய்கள்வால் ஆட்டுமோ தோழா !
அம்மணத் தோடிவர் கோவணம் கிழிய
அடித்து விரட்டிடு தோழா - இனி
அடையாளம் இல்லாமல் காங்கிரசுப் புல்பூண்டை
அழித்திட வேண்டும்நீ தோழா !
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|