![](../../images/blank.gif) |
கவிதை
நேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 07
எம்.ரிஷான் ஷெரீப்
விரைவில் சந்திக்கவேண்டுமென
அடவிகளினூடே குறுகியவழிகளில்
பயணிக்குமெனை நிறுத்தியுன்
நலம் விசாரிக்கின்றன விருட்சங்கள்
காலம் முழுவதற்குமாக
ஒரே வண்டினை ஈர்க்கவென
நறுமணங்களைப் போர்த்தியுள்ள உன் பற்றி
வனப்பூக்கள் பொறாமையில் கிசுகிசுக்க
தரைச் சிறுபுற்களும் பஞ்சாகியென்
பாதங்கள் தாங்குகையில்
நதிகளில் கோடு கிழித்து உனைச் சேரப்
பாலங்கள் அமைக்கின்றன நாணல்கள்
மலையடிவாரமொன்றில்
காணக்கிடைக்கா மலரொன்றினைக் கண்டு
நெருங்கியருகில் முகர்ந்ததன் வாசனை பார்க்கிறாய்
கிடைக்க அரியப் பெருமுத்தம்
பேரழகிய பூவிடமிருந்து கிடைத்த மகிழ்வில்
சிலிர்த்துதிர்க்கிறது
எல்லாப் பூக்களுக்குமான நறுமணங்களையும்
பூவைத் தாங்கி நின்ற மரம்
அன்று இரு பூக்களுரசிட
தீப்பற்றும் மலையடிவாரம்
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
![](../../images/blank.gif) |
|