|
கவிதை
ரவி சுவாமிநாதன் கவிதைகள்
1
வாழ்க்கையில் எதுவுமே
என் கட்டுப்பாட்டில் இல்லை
எனக்கு
வாழ்க்கைப்பட்டவளைத் தவிர...!
அவளுக்கு
அதுவும் இல்லை...!
2
ஏசுவின் அன்பு
மதமானது...!
புத்தரின் ஜென்
மார்க்கமானது...!
மார்க்ஸின் பொதுவுடமை
அரசியலானது...!
சங்கரரின் அத்வைதம்
தத்துவமானது...!
காந்தியின் அஹிம்சை
வெறும் சரித்திரமானது...!
3.
கால்கள் கட்டப்பட்டு
தலைகீழாக தொங்கவிடப்பட்டு
மிதிவண்டியின் கைப்பிடியில்
பயணிக்கும்
கோழிகள் அறியாது
தன் இறுதிப்பயணத்தை...!
- ரவி சுவாமிநாதன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|