 |
கவிதை
நமக்குள் அறிவுநிதி
ஒருவித சுழற்சியால் மெதுவாக
மேலெழும்புகிறது ஏதோ ஒரு தவிப்பு
இன்பமும் துன்பமும் சமநிலையில்
சில சமிக்கைகள் நிகழ்ந்த வண்ணமிருக்க
இதழ் உடுத்தாத புன்னகை
உதிர்கிறது மனதின் ஆழத்தில்
மழைப்பதத்தின் சாராலரக ஒரே சுவாசம்
ஏறி இறங்குகிறது இருவருக்குமானதாக
வெளிச்சத்தின் அரங்கத்தில்
வௌ;வேறு நிர்ணயங்களில் தரிசித்தும்
கலைகிறது முழு சாத்தியங்களுடன்
தவத்தின் நிலை
- அறிவுநிதி (arivuniti@yahoo.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|