Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

பாலைவாசி
ஆதவன் தீட்சண்யா


Desert அல்லியும் ஆம்பலும்
குவளையும் தவளையும் இனியெங்கே
கம்மாயும் குளங்களும் தான்
காய்ந்துத் தூரேறிக் கிடக்கிறதே

தோட்டமும் கொல்லையும்
மனையடியாய் மாறியதில்
காம்பவுண்டானது பச்சை உயிர்வேலி
படர்ந்து நிறைக்க கொழுகொம்பின்றி
வதங்கிச் சொடுங்குது கோவைக்கொடி

தொட்டிச்செடி போல்
சுரைக்கொடி படர்வதில்லை கான்கிரீட் சுவர்களில்
குறுக்கு நெடுக்காய் ஓட
கொட்டாய்க்கூரையே கும்மாளம் அதற்கு

ஒளவைப்பாட்டி நெல்குத்தும் நிலவில்
ஆர்ம்ஸ்ட்ராங்கின் பூட்ஸ் அழுக்கு
முத்தெடுக்க மூழ்கினால்
லெமுரியப்படிவுகள் விண்கல உதிரிகள்
பாலித்தீன் விழுங்கிச்செத்த நீர்ராசிகள்
மீன்பிடிச்சண்டை / கடற்கொள்ளையில் மாண்டோர்
கபாலங்கள் தட்டுப்படுகின்றன

இங்கே மூச்சு முட்டுகிறது
போபால் எங்கோ இருக்க

துளசி மணந்தக் காடுகளில்
பார்த்தீனியம்

எதன் பேராலோ சகித்துக்காள்கிறாய்
இதையெல்லாம் நீயும்
எனக்குத்தான் ஏலவில்லை
ஒப்பிட்டு வர்ணிக்க ஓரழகும் மிஞ்சாத
இந்தப் பொட்டல் நகர் நின்று
பொத்தாம்பொதுவாய் உன்னை
அழகென்று சொல்ல.

- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.