கவிதை
சாத்தான் மட்டுமே வேதம் ஓதும் ஆதவன் தீட்சண்யா
கூரையில் வைக்கப்பட்ட தீ
திகுதிகுவெனப் பரவி எரித்துக்கொண்டிருக்கிறது
என்வீட்டை
தசை கருகும் நெடியில் வெளி திணறுகிறது
தணலில் வெந்து கொண்டிருப்பது
படுக்கையாய்க் கிடந்த என்தாயாகவோ
நிறைசூலியான எனது மனைவியாகவோ இருக்கலாம்
நாங்கள் சேமித்துவைத்திருந்த விதைதானியங்கள்
வெடித்துத் தெறிக்கின்றன சோளப்பொரியைப்போல
என் அண்டைவீட்டார்
நீரையிறைத்துக் கொண்டிருக்கின்றனர்
முன்ஜாக்கிரதையோடு
தத்தமது கூரைமீது
எவர்மீதும் சேதாரத்தை விசிறாமல்
தனக்குத்தானே குமைந்திறங்குகிறது சாம்பலாய் என்வீடு
யார்மனதும் தொந்தரவுக்காளாகாத வண்ணம்
இதுகுறித்த புகாரினை வெளிப்படுத்துவது எங்ஙனமென
ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருக்கிறான்
- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|