கட்டுரை
தன்னழிப்பு ஆதவன் தீட்சண்யா
சிதைத்த கானகவெளியில்
நீர்நிலைகள் தூர்த்து
நிர்மாணித்த நகரங்களில்
இப்போது
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்
சந்தடியற்று
தனிமையின் அமைதியில் தோய்ந்து
சூரிய சந்திர ஒளி குளித்து
மாசற்றக் காற்றில் தலைதுவட்ட
வேறு வனங்களையழித்து
புறநகர் பகுதியொன்றில்
ஒவ்வொருவராய் குடியேறிய பின் கிளம்பியது புகார்:
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்.
- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|