|
கவிதை
விகற்பகால கீதம் ஆதவன் தீட்சண்யா
விறைத்த மார்க்காம்பு அழுந்த இறுகத்தழுவி
நீ தந்த முத்தங்களோடு
முடிவுக்கு வருகிறது இன்றைய வாழ்வு
மோகிதத்தின் வெம்மைப் போர்த்தி
தனியே உளைகிறேன்
அந்தரத்தில் விரிக்கப்பட்டிருக்கும் என் மஞ்சத்தில்
காதலின் பேரொளி பிரகாசிக்கும் நீயற்றதான வெறுமையில்
தேங்கி வீழ்கிறது மனஅருவி
நீர்த்துப்போனதொரு கவிதையைப்போல
உடனுறையா ஏக்கத்தில்
ஒரு கிழங்கைப்போல் வெந்து பிளந்திருக்கும்
என்தசையைத் தின்று பசியாறுகின்றன
அதிகாலையின் காக்கைகள்
ஆர்ட்டீசியன் ஊற்றைப்போல் பீறி நீ திரும்பும்காலை
என்னவாய் நான் மீந்திருப்பேன்?
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|