கட்டுரை
அடையாளம் ஆதவன் தீட்சண்யா
கருக்கலிட்டு மினுங்கும்
சூரியன் தார்க்கொப்பளத்தில்
கால்பாவவொட்டாது கடும்வெயில் கொளுந்தும்
நிழல் பொசுங்கிய
கடுவெளியின் மரத்தடியில்
தாயின் மார்க்காம்பு ஞாபகத்தில்
விரல் சப்பித் துயிலாரும்
குழந்தை நினைப்பில்
அனல் வளவும் பாய்லரில்
தார்க்காய்ச்சிக் கொண்டிருப்பாள் தாய்.
- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|