 |
கட்டுரை
சுயாதிபதியாவதற்கான மூலபாடம் ஆதவன் தீட்சண்யா
உயிர் தளரச் சுமந்தும்
மரிக்கத்தானே வேண்டியிருந்தது
இயேசுவும்
இறக்கிவை ரூப அரூபச் சுமைகளை
நெருங்கியமர் என்னை
ஏற்றுத் திளை என் உபசாரத்தில்
உரையாடலுக்குப் பின்
அநாதையாய் வீசி நட சுமைகளை
பீளையும் குரும்பியுமன்றி
வேறேதும் அண்டாத அவயவங்களும்
கசடு போக்கி சுத்திகரித்த மூளையுமாகி
எதன் கண்காணிப்புமற்று
உள்வயமானதாகட்டும் எஞ்சிய பயணம்
ஆனால்
சுமை நீங்கிய நினைப்பே
கனத்து வலிக்குமானால்
குற்றஞ்சாட்டாதே என்னை.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|