Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

சுயாதிபதியாவதற்கான மூலபாடம்
ஆதவன் தீட்சண்யா

உயிர் தளரச் சுமந்தும்
மரிக்கத்தானே வேண்டியிருந்தது
இயேசுவும்

இறக்கிவை ரூப அரூபச் சுமைகளை
நெருங்கியமர் என்னை
ஏற்றுத் திளை என் உபசாரத்தில்

உரையாடலுக்குப் பின்
அநாதையாய் வீசி நட சுமைகளை

பீளையும் குரும்பியுமன்றி
வேறேதும் அண்டாத அவயவங்களும்
கசடு போக்கி சுத்திகரித்த மூளையுமாகி
எதன் கண்காணிப்புமற்று
உள்வயமானதாகட்டும் எஞ்சிய பயணம்

ஆனால்
சுமை நீங்கிய நினைப்பே
கனத்து வலிக்குமானால்
குற்றஞ்சாட்டாதே என்னை.


- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.