கட்டுரை
பயணம் ஆதவன் தீட்சண்யா
துகளாய் மேவிய பொடிமணலன்றி
வேறென்ன இருக்கிறது கரையில்?
பொங்கி நுரைத்தழியும் புத்தலையும் பழையதே
பூரித்து மகிழ ஏதுமில்லை நீர்க்கோட்டில்
விரைத்த பிணம் போலிருக்கும் நடுக்கடலின் மௌனம்
துவளவைக்கிறது கிளர்ச்சியுற்ற மனத்தை
மீனின் கண்ணொன்றில் தங்கி
ஆழம் ஆழமென அகழ்ந்து பாய்கையில்
கடலும் தரையும் கக்கத்தில் விலக
மண்ணுக்குள் புதைகிறேன்
மறைந்திருக்கும் அற்புதங்கள் தேடி.
- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|