கட்டுரை
பாலஞானம் ஆதவன் தீட்சண்யா
இத்துனூண்டு சைக்கிள்...
பெரீய்ய பொம்மை
கத்திரிப்பூ நிற கவுன்
மொழுக்கென்றிருக்கும் பழங்கள்
கிஜூகிஜூன்னு கூட்டமென்று
கண்ணும் மனசும்
விரியவிரியக் கண்டதையெல்லாம்
களிபொங்கச் சொன்னாள் செல்லமகள்
திரும்பும் வழிநெடுகிலும்
வீட்டைந்த பின்னும்
கைதேர்ந்த வேசியைப்போல் சிங்காரித்திருக்கும்
இக்கடைவீதியின் பண்டங்கள்
பார்த்துக்கொள்ள மட்டுமே தமக்கென்று
இயல்பிலேயே தெரிந்திருக்கிறது
இல்லாதவன் பிள்ளைக்கு.
- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|