Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

வல்லடி
ஆதவன் தீட்சண்யா

Rain flood மூர்க்கமழை
திமிறியாடும் வெள்ளம்
நீர்ப்பண்டமாய் கரைகிறது ஊரே
வீதி நிர்த்தூளியானாலென்ன
வீட்டுக்குள் வெள்ளம் வந்துவிடக்கூடாது

ஊருக்கு வந்தும் ஊருக்குள் வராத
புறவழிச்சாலை பேருந்துபோல
எங்கும் தங்காமல்
கண்காணா வெளியோடி
வெள்ளக்காடு வடிந்தபின்
சேறும் சகதியுமாய்
நிலைதளம்பிக் கிடக்கிறது திடநிலம்

தெருவில் இறங்கமுடியாது யாரும்
அதனாலென்ன
வீட்டோரம் ஒதுங்கியிருக்கும்
பிணமொன்றை நடைப்பாலமாக்கி
ஏறிக் கடந்து இலக்கை
அடைவதில் இருக்கிறது
இருபத்தியொன்றாம் நூற்றாண்டிற்குள்
உன்னைப் பொருத்திக்கொள்ளும் சாதுர்யம்.


- ஆதவன் தீட்சண்யா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com