Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

வியாக்கியானம்
ஆதவன் தீட்சண்யா


கை பிசகி தெறித்த மசித்துளி
வெட்டாந்தரையாயிருந்த தாளின்
வெறுமை குலைத்தது

"மாந்திரீக குறிப்புகளின்
சங்கேத முற்றுப்புள்ளி "
"புள்ளிகளாய் நிரப்பவேண்டிய
பூடகத்தின் முதற்புள்ளி "
"ஆதி இதுவே
அதுவே மையத்திலிருக்கிறது
எங்கும் ரகசியமாய் நிரம்பியிருக்கிறது
எல்லாவிடமும் நகர்கிறது"
"உண்மையில் அது புள்ளியல்ல
புள்ளி போலிருக்கும் பூர்வ வடிவெ"ன்றும்
அனேக அபிப்ராயம்

புள்ளி புள்ளியாயிருந்தது
பலர் பலவாய்ச் சொல்லிக்கொள்ள.

- ஆதவன் தீட்சண்யா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com