Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
பிப்ரவரி 2009

தலையங்கம்
தற்கொலைகளல்ல தற்போதைய தேவை!

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.


ஆசிரியர் குழு

எஸ்.கண்ணன்
ஆர்.வேல்முருகன்
ஆர்.வேலுசாமி
வி.ஜானகிராமன்
எம்.கவிதா

ஆசிரியர்

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

முகவரி:

ஏ.பாக்கியம்
118/10, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 600 003

dyfitn@yahoo.co.in

ஆண்டு சந்தா: ரூ.50
ஆயுள் சந்தா: ரூ.500

வள்ளுவப் பெருமகனார் பாடிய குறள். வெளிவரும் செய்திகளையும், கேட்கிற, படிக்கிற செய்தி களையும், ஆழமாகத் தெரிந்து அதற்குத் தீர்வு காணும் பாதையில் பயணிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அத்தகைய அறிவுத் தெளிவைக் கொடுப்பது சமூகத்தின் கடமை. சமூகம் தனது கடமையில் இருந்து தவறியமைக்கு உதாரணம் முத்துக்குமார். 28 வயது இளைஞன், பத்திரிகையாளன். ஆனால் சாஸ்திரி பவனுக்கு முன்னாள், ஆயிரக்கணக்கான மக்கள் நட மாட்டம் கொண்ட சென்னை மாநகரின் பொதுச்சாலையில் நெருப்புத் தனலுக்கு இரையாக்கிக் கொண்டது கொடுமை.

இலங்கைத் தமிழர்களின் துயர் 60 ஆண்டுகளாக நீடிப்பதும், 30 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டமாக மாறி இருப்பதும், அவலம் என்பது உலகறிந்த உண்மை. உலகில் எந்தப் போராட்டமும் சில ஆண்டுகளில் வெற்றி பெற வில்லை அதற்காக துயரங்களை சகித்துப் போராடி இருக்கிறார்களே ஒழிய அவசரப்பட்டு அழித்துக் கொணடதில்லை. இந்திய விடுதலைப் போராட்டம் 200 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுள்ளது. இதே இந்தியாவிற்குள், பஞ்சாப் தீவிரவாதிகள் உயர்த்திப் பிடித்த முழக்கமான காலிஸ்தான், விரைவில் முடிவுக்கு வந்தது. காஷ்மீர், அஸ்ஸாம், பகுதிகளில் நீடிக்கிறது இவற்றிற்கு பேச்சு வார்த்தை தான் தீர்வு. பல தேசிய இனங்களைக் கொண்ட நாட்டில், வறுமை, கல்வி, வேலை, சுகாதாரம்,ஆகியவற்றின் இல்லாமை, மொழி, இனம், மதம், சாதி ஆகியவற்றின் பெயரிலான பாகுபாடு, தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும். அதனால் தேசிய இனங்கள் பிரிந்து செல்வது, என முடிவெடுத்தால், முடிவு அபத்தமாகவே இருக்கும்.

தன் மீதான மேலாண்மை, ஆதிக்கம் ஆகியவற்றை அழிப்பதற்கு பதிலாக, தொண்மைச் சமூகம் நாடாள வேண்டும், அதற்கு தனிநாடு வேண்டும் என்பது, அதிகாரத்தின் மீதான பற்றுதலை மட்டுமே வெளிப்படுத்தும், இலங்கைக்குள் இப்போது நடைபெறும் மோதல் அதிகார நிலை நிறுத்தம் சார்ந்ததே. இதில் அப்பாவித் தமிழ் மக்கள் லட்சக் கணக்கில் சிக்கியிருப்பது பதட்டத்திற்குரியது. அப்பாவித் தமிழ் மக்களை 48 மணி நேரத்தில் விடுவிக்க வேண்டும், என்ற குறுகிய கால அவகாசம், ராஜபக்ஷெ தரப்பில் தருவது, தனது ராணுவத்தின் வெற்றி மீதான அதி காரம் காரணமானதாகும். லிஜிஜிணி மீதான கெடு மக்களைப் பாதுகாப்பதுடன் இணைந்தது, மக் களை போர்க்களத்தில் இருந்து மீட்க இலங்கை அரசு முன்னுரிமை தருவதாக இருக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையை இந்திய அரசு தரப்பில் இலங்கையிடம் தெரிவிப்பதற்கு பிரணாப் முகர்ஜி நேரிலும் சென்றுள்ளார். அருகில் உள்ள நாடு என்கிற தன்மையில், இத்தகைய கோரிக்கையை முன்வைப்பது சரி. “இதற்கும் மேலே சென்று’’ இந்திய அரசு இலங்கையை வலியுறுத்துவது என்ற எதிர்பார்ப்பு ஒரு வித மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது” என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

இலங்கை தமிழ் மக்களை காக்க முத்துக்குமார் போன்ற இளைஞர்கள் தீக்குளிக்க முன்வருவது, சரியல்ல தமிழகத்தில் நீண்ட காலமாக இருக்கிற சமூகக் கொடுமைகளில் ஒன்றாக தீக்குளிப்பும் நீடிக்கிறது. போராடி வெல்வது, வெல்வதற்காகப் போராடுவது, தமிழ் இலக்கிய சான்றாக இருக்கிறபோது, தன்னைத் தானே அழித்துக் கொல்வதும், அதை அரசியலாக்க முயற்சிப்பதும், இரைஞ்சுவதற்கு ஒப்பாகும்.

“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம்” என்றான் பாரதி. இதற்கு முரணாக ஒருவன் அழிந்து தமிழனை காக்கலாம் என்பது, பகுத்தறிவு அற்றது. இப்போதைய தேவை, தமிழர் பகுதிக்கான சுயாட்சி அதிகாரம், அரசியல் தீர்வு ஆகியவையே. ராணுவத் தீர்வல்ல என்பதை வலியுறுத்தும் போராட்டங்கள் மட்டுமே தற்கொலைகளல்ல.

ஆசிரியர் குழு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
mani
2009-02-13 12:24:00
fmvasanthy@gmail.com

முட்டாள்தனமான தலையங்கம் இது. வேலையில்லை சுகாதர வசதியில்லை என்பதற்காக நடப்பதல்ல ஈழ மக்களின் போராட்டம். உங்களுக்கு ஆயுத்ம்தான் பிரச்சினை என்றால் அதனை நேரடியாக சொல்லலாமே..ஏன் ஒளிவு மறைவு..

தேசிய இனங்கள் எந்த சூழலில் பிரிந்து செல்லலாம் என தோழர் லெனின் சொன்னது இது. ''எந்த ஒரு தேசத்துக்கோ அல்லது மொழிக்கோ சிறப்பு சலுகை எதுவும் கிடையாது; ஒரு தேசிய சிறுபான்மையினரைப் பொறுத்தவரை மிகச் சிறு அளவுகூட ஒடுக்குமுறையோ அநீதியோ இருக்கக்கூடாது. இவைதாம் உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தின் கோட்பாடுகள் ஆகும். (லெ.தொ.நூ. 19.91, ஒப்: 243).
வரப்போகிற உலகப் புரட்சியின் தீர்மானமான போர்களில் தேசிய விடுதலை என்பதை முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ள உலக மக்களில் பெரும்பான்மையோரது இயக்கம், முதலாளியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானதாகத் திரும்பும் என்பதும், நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகக் கூடுதலான புரட்சிகரப் பங்கை வகிக்கக் கூடும் என்பதும் தெளிவாகிவிட்டது. (லெ.தொ.நூ. 32. 482)

தேசிய ஒடுக்குமுறையைத் துடைத்தெறிய, தன்னாட்சிப்பகுதிகளை உருவாக்குவது மிகவும் முக்கியம், அவை எவ்வளவு சிறியதாகவும் இருக்கலாம். இவை முற்றிலும் ஓரின மக்கள் தொகையினரைக் கொண்டவையாக இருக்க வேண்டும். நாடு முழுவதிலும் - ஏன் - உலகம் முழுவதிலுமே சிதறிக் கிடக்கின்ற அந்தந்த தேசிய இன மக்களை ஈர்க்கக்கூடிய பகுதிகளாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லாவகை உறவுகளையும் சுதந்திரமான இணைப்புகளையும் ஏற்படுத்தி கொள்ளக்கூடிய தன்னாட்சிப் பகுதிகளாக இருக்க வேண்டும். (லெ.தொ.நூ. 20.50)
ஐடியலான முரணற்ற முழுமையான ஜனநாயக குடியரசு பற்றிய லெனின் (லெ.தொ.நூ. 19.427) சொன்னது '' இவ் அடிப்படை சட்டம், எல்லா தேசங்களுக்கும் மொழிகளுக்கும் முழுச் சமத்துவத்தை உத்திரவாதம் செய்ய வேண்டும்; எந்த ஒரு கட்டாய ஆட்சி மொழியையும் ஏற்காததாக இருக்க வேண்டும். சொந்த மொழிகள் அனைத்திலும் கல்விபுகட்டுகிற பள்ளிகளை மக்களுக்கு வழங்குகிற ஒன்றாக இருக்க வேண்டும். எந்த ஒரு தேசத்துகக்கும் தனிச்சலுகை வழங்குவதையும், தேசிய சிறுபான்மையினரின் உரிமைக்ள் மீது கை வைப்பதையும் தடை செய்கின்ற சட்டமாக இருக்க வேண்டும்.''

So லெனின் முட்டாள்தனமாக பேசி உள்ளாரா ? அல்லது நீங்களா ? என்பதை தெளிவு படுத்துங்கள்.

தொன்மை சமூகம் நாடாள வேண்டும என்ற ஆவலில் தோன்றியதா ஈழமக்களின் போராட்டம்? வரலாறு பாமர மக்களுக்கு தெரிந்த அளவு கூடவா தங்களை மார்க்சியவாதிகள் என்ச் சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியாது. அதிகாரத்தின் மீதான பற்று என நீங்கள் சொல்லியிருப்பது சுதந்திரத்திற்கான தாகத்தை. மேலே கண்ட லெனின் வாசகங்களை மீண்டும் படியுங்கள். நீங்கள் ஈழத்தை கேவலப்படுத்தவில்லை. மாறாக லெனினைக் கேவலப்படுத்தி உள்ளீர்கள்.
/“இதற்கும் மேலே சென்று’’ இந்திய அரசு இலங்கையை வலியுறுத்துவது என்ற எதிர்பார்ப்பு ஒரு வித மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது” என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்./
இது உண்மையான கூற்று நீங்கள் எதனையும் புரிந்து கொள்ள மறுப்பது என்ற ஜனநாயப்பண்பை எப்போதே பெற்று உள்ளீர்கள். பிராந்திய வல்லரசாக, அமெரிக்காவின் தெற்காசியப் பேட்டை ரவுடியாக இந்தியா உள்ளது என அறிவுஜீவிகள் விமர்சித்தால் பாஜக வைவிட உங்களுக்குதான் கோபம் வரும்போல தெரிகின்றது. என்ன செய்ய உங்களது கொள்கையை விட சொம்நாத் சட்டர்ஜி காட்டிய நாடாளுமன்ற விசுவாசம் அதற்கு வவாய்ப்பு கிடைக்காத தங்களைப் போன்றோருக்கு தேசாபிமானமாக வெளிப்படுகின்றது, தேச ஆளும் வர்க்கம் ஒரு பேட்டை ரவுடியாக இருந்தால் கூட.
/ தமிழகத்தில் நீண்ட காலமாக இருக்கிற சமூகக் கொடுமைகளில் ஒன்றாக தீக்குளிப்பும் நீடிக்கிறது. போராடி வெல்வது, வெல்வதற்காகப் போராடுவது, தமிழ் இலக்கிய சான்றாக இருக்கிறபோது, தன்னைத் தானே அழித்துக் கொல்வதும், அதை அரசியலாக்க முயற்சிப்பதும், இரைஞ்சுவதற்கு ஒப்பாகும்/தீக்குளிப்பது சமூகக் கொடுமைதான் அது சதி என்ற வடிவில் வந்தால். சக மனிதர்கள் மீது இன ஒழிப்பு நடக்கும்போது வாளாவிருக்கும் உங்களைப் போன்ற இளைஞர் இயக்கங்கள் இருக்கும் தேசத்தில் தீக்குளித்துதான் ஒரு இளைஞன் உங்களது கள்ள மவுனத்தை உடைக்க முடிகின்றதென்றால் அதற்காக முத்துக்குமரன் வெட்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. முத்துக்குமரன் இந்திய அரசுட்ன போராடவில்லை, கள்ள மவுனம் இன்றளவும் சாதிக்கும் போலி ஜனநாயக, கம்யூனிச வாதிகளின் மன்ச்சாட்சிக்கு எதிராகத்தான் போராடி உள்ளான். வரலாறு தெரிந்தால் வியத்நாம் புத்தபிக்குகள் அமெரிக்க ஏகாதிபத்திய போர்வெறிக்கு எதிராக அறுபதுகளில் நிகழ்த்திய தீக்குளிப்பு வடிவத்தை என்னவென்று சொல்வீர்கள்.

அதெல்லாம் இருக்கட்டும். தமிழக இளைஞர்களை வாயைக் கட்டி போராட்டம், நாமம் போட்டு போராடுவது, கழுதையிடம் மனுக் கொடுத்து அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடுவது, திருவோடு எடுத்து போராடுவது, கோவணம் கட்டிப் போராடுவது, ....இப்படி இரைஞ்சுகினற் வடிவங்களையெல்லாம் போராட்டம் என அழைத்துக் கொண்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் தாங்கள் என்பது மறந்துவிட்டதா?
/ “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம்” என்றான் பாரதி. இதற்கு முரணாக ஒருவன் அழிந்து தமிழனை காக்கலாம் என்பது, பகுத்தறிவு அற்றது./
சுய அறிவில்லாமல் அல்லது லாஜிக் இல்லாமல் எழுதப்பட்ட ஒரு வாக்கியம் பகுத்தறிவு பற்றிப் பேசுவது முரண்நகை. கடைசியாக பேச்சுவார்த்தை அதாங்க அரசியல் தீர்வுன்னு நீங்க சொல்ற கட்டப்பஞ்சாயத்துதான் வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் சமத்துவவாதிகள். இப்போரை ராஜபக்ஷ நிறுத்தவும் கோருவீர்கள் எனக் கருதுகிறேன். அது சரி... அதுக்கு யாரிடம் வலியுறுத்து போராடுவீர்கள். இந்தியாவிடமா? ஒரு நிமிசம். இந்தியாவும் டாங்கிகள், ரேடார்களோடு தனது ராணுவத்தையும் அனுப்பியுள்ளது. என்ன சொல்லி தப்பிக்க போறீங்க..

Baappu
2009-02-14 06:35:00
ponnoos11504@gmail.com


காலத்திற்கேற்ற அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய தலையங்கம்.

அழித்தொழிப்பை கைவிட்டு மாணி போன்ற நக்சல் வாதிகள் தமிழகத்தில் தற்கொலையை புரட்சிப்பாதையாக முன்வைக்கிறார்கள் அருமை.

Thana
2009-02-14 06:35:00
thananjayanv@gmail.com

நீங்கள் பிரச்சினையை வைத்து தீர்வை சொல்லவில்லை ,முன்னமே உங்களுக்கு தெரிந்த தீர்வை எல்லா தருணங்களுக்கும் ஏற்றதாக சொல்கிறீர்கள். உங்கள் பக்கத்து வீட்டில் கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டால் கண்டு கொள்ளாமல் போவது கண்ணியமாக இருக்கலாம், ஆனால் கொலை நடந்தாலும் கண்டு கொள்ளமாட்டேன் அது அவர்கள் வீட்டு பிரச்சினை என்று சொன்னால் உங்களைப் போன்ற கொள்கைவாதிகளை என்னவென்று சொல்வது?.

ஏகலைவன்
2009-02-15 05:42:00
yekalaivan@gmail.com

சி.பி.எம். என்கிற பிழைப்புவாத போலிகம்யூனிச முகாமின் வாலான dyfi சார்பில் வெளியிடப்படும் பத்திரிக்கையில் இதைவிட வேறெதை எதிர்பார்க்க முடியும்? இதற்குமேல் வேறொரு வார்த்தைகளை அவர்கள் இணைக்க விரும்பினாலும் ‘ஹிந்து’ராம் போன்ற அதி’முற்போக்கு’வாதிகளிடம் அனுமதி பெறாமல் முடியுமா?

இது ஒரு தலையங்கம்! இது ஒரு பத்திரிக்கை!! என்ன இருக்கிறது இதில், ஏனைய பிற்போக்கு, முதலாளித்துவ ஏடுகளில் இல்லாத எதுவும் இதில் இருக்கிறதா? சோ வின் எழுத்தும், ஜெயாமாமியின் வியாக்கியானங்களும், இந்துவெறி பாசிஸ்டுகளின் மொழியைத் தவிர இதற்குள் வேறு என்ன இருக்கிறது?

முத்துக்குமாரின் மரணத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதற்கு இது தருணம் அல்ல. முத்துக்குமாரின் முடிவை இங்கு யாருமே ஆதரிக்கவில்லை. ஆனால், தன்னுடைய அந்த முடிவின் மூலமாக அவர் சொல்லியிருக்கும் செய்தியினைத்தான் அனைவருமே உயர்த்திப்பிடிக்கின்றனர். அப்படி அவருடைய தீக்குளிப்பை மட்டுமே, அவரது ஆதரவாளர்கள் பற்றிக்கொண்டிருந்தால் அதன் தொடர்ச்சியாக அவர்களும் தீக்குளிக்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இந்திய - இலங்கை அரசுகளுக்கு எதிரான போராட்டக் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். முத்துக்குமார் மூட்டிய தீயை உயர்த்திப்பிடித்து எழுச்சியோடு நிற்கின்றனர் அவர்கள்.

ஈழப் போராட்டம் புலிகளுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுவதாகவும், அப்பாவித் தமிழர்களுக்கொன்றும் பாதிப்பில்லையென்றும் எழுதிக்கொண்டு, அங்கு நடைபெற்ற கிரிக்கெட் சூதாட்டத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டு மகிழும் தீக்கதிர் என்கிற நாளேடு, மேற்படி போலி கம்யூனிச சி.பி.எம். கும்பலுடையது. முத்துக்குமார் வீரமரணத்தைத் தழுவிய மறுநாள், சமூகத்தில் எந்த விதமான முக்கியத்துவமும் பெறாத சினிமாக் கோமாளி நாகேஷுக்கு படத்துடன் செய்திவெளியிட்ட இந்த தீக்கதிர், முத்துக்குமாரின் செய்தியை வெறும் ‘வாலிபர் தற்கொலை’ என்கிற பெட்டி செய்தியோடு முடித்துக்கொண்டது, அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.

இவர்களின் சிந்தை கிரிக்கெட் சூதாட்டத்திற்கும், சினிமாக் கழிசடைக்கும் சோரம் போயிருக்கும் நிலையில் இவர்களிடமிருந்து வெளிவரும் எழுத்துக்களில் நாம் வேறு எதையும் எதிர்பாக்க முடியாது.

முத்துக்குமாரின் முடிவு பகுத்தறிவற்றது என்று எழுதும் இந்தப் போலிகள்தான் இந்துவெறிக்காலிகளுடன் கைகோர்த்து ஆயுதபூசை நடத்தி வருகிறார்கள். பகுத்தறிவைப் பற்றி யார் பேசுவது? போகட்டும், முத்துக்குமாரின் முடிவைக் குறித்து நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். இன்னும் சற்று சுதி கூட்டி வேண்டுமானாலும் வசைபாடிக்கொள்ளுங்கள், ஆனால், அவர் இறுதியாக இச்சமூகத்துக்கு விட்டுச் சென்றுள்ள மரண சாசனத்தைப் பற்றி இதுவரை எங்காவது வாய்திறந்திருக்கிறீர்களா? ஒற்றை வார்த்தையையாவது எழுதியிருக்கிறீர்களா? ஏன் செய்யவில்லை?! மக்களைப் போராட்டத்திற்கு திரட்டுகின்ற மொழியை பாசிஸ்டுகளால் எப்படி ரசிக்க முடியும்? அதுதான் இதற்கான காரணமாக இருக்கிறது.

அய்யா, பிழைப்புவாத கனவான்களே! உங்களுடைய பிழைப்பை எப்படி வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள்; முற்போக்கு முகமூடியையும் கம்யூனிச வேடத்தையும் தயவுசெய்து கழற்றி விடுங்கள்; அத்துவானிகள், மோடிகள், சுப்பிரமணியசாமிகள் உங்களை அள்ளித்தழுவக் காத்திருக்கின்றனர்.

நேர்மையான சி.பி.எம். ஆதரவாளர்கள், இங்கு பதியப்படும் எதிர்வினைகளுக்கு முறையான பதில்களைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நட்புடன்,
ஏகலைவன்.

இந்த மோசடியான தலையங்கத்தையும் பத்திரிக்கையினையும் கண்டித்து இங்கு கருத்து பதிந்துள்ள வசந்தி போன்ற தோழர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏகலைவன்
2009-02-15 07:53:00
yekalaivan@gmail.com

சிரிலங்காவுக்கு வக்காலத்து வாங்கும் CPMமே இதையும் பார்:

Tamils In Lanka Jews Under Nazis?

A former US diplomat makes serious charges of genocide against Lankan officials, which could go all the way to US courts, reports PC VINOJ KUMAR
Cover Story

Crying out Protests over the assassination of senior Lankan journalist Lasantha Wickramatunga
Photo: AFP

THE SRI LANKAN government is claiming an all-out victory in its recent campaign against the insurgent Liberation Tigers of Tamil Eelam (LTTE). Even as the United Nations voiced concern over the increasing number of civilian Tamil casualties in the war between the LTTE and the Sri Lankan army, pressure is building on the nation’s hardline Sinhala leadership over its allegedly genocidal acts against the Tamil minority. Former US Deputy Associate Attorney General Bruce Fein has compiled evidence he believes is sufficient to prosecute Sri Lankan Defence Secretary Gotabaya Rajapaksa and army chief Lt Gen Sarath Fonseka under the United States Genocide Accountability Act. Gotabaya, brother of President Mahinda Rajapaksa, is a US citizen and Fonseka is a US Green Card holder.

Fein, associated with a US-based group, Tamils Against Genocide, was on a private visit to Chennai last week. Speaking to TEHELKA, Fein says he has prepared a 1,000-page model indictment against Gotabaya and Fonseka for submission to the US Department of Justice. “Since Gotabaya and Fonseka assumed office (in 2005), there have been virtually one to three extra-judicial killings daily in Sri Lanka,” states Fein. These, he clarifies, do not include LTTE casualties. “My work has nothing to do with the LTTE,” Fein says.

THE CHARGES

‘The national identity cards help identify Tamils easily, so the government knows whom to kill’

‘People are abducted in mysterious white vans, with no license plates. They are never heard of again’

‘The government has complete authority over the perpetrators of genocide: army, police, thugs, army deserters’

The model document, if accepted in the US would make Gotabaya the first US citizen to be tried for genocide

Comparing the present conditions of Tamils in Sri Lanka to the sufferings of the Jews under the Nazis and of the blacks during the apartheid era in South Africa, Fein says: “The national identity cards given to the Tamils are almost like the Star of David badges the Jews had to wear during the Nazi era.” He alleges that the cards are meant to identify Tamils easily so the government knows “whom to kill”.

Conditions have allegedly worsened over the last three years. People are abducted in “mysterious white vans” that have no license plates, Fein says. The abducted are never heard of again and are counted among the thousands of ‘disappeared’ persons. The genocidal intent of the Rajapaksa regime can be established through its various discriminatory policies against the Tamils. “The government has been creating conditions intended to promote their physical destruction,” claims Fein, arguing that many Rajapaksa policies constitute genocidal acts under US law. The blockade on transporting essential commodities to Tamil areas is one example, Fein says, for the starvation it has caused to the north Lankan civilian population.

GOTABAYA RETIRED from the Sri Lankan army in 1992, having served in it for 20 years. He then moved to the US and worked as a computer systems administrator at the Loyola Law School in Los Angeles. He returned to Sri Lanka in 2005 to assist Rajapaksa during his presidential campaign. Ever since his brother became President, Gotabaya has been part of his core group and is urging Rajapaksa to pursue a military solution to the 25- year-old ethnic conflict.

Sri Lanka’s Tamils have suffered repression at the hands of the Sinhalese since the 1940s. Soon after achieving independence from British colonialism in 1948, the Lankan government passed the Citizenship Act by which about a million Tamils lost their citizenship and voting rights. Later, Sinhala was made the country’s only official language, placing Tamils at a disadvantage, particularly for government jobs. Moderate Tamil politicians failed to impact the government to change its policies. Finally, in the 1970s, Tamil youths took to an armed struggle.

In 2002, Rajapaksa’s predecessor, Ranil Wickremasinghe, entered into a ceasefire agreement with the LTTE. Rajapaksa withdrew from the ceasefire in January 2008. Since then, the country has been plunged into bloodshed.
Cover Story

Accuser Bruce Fein is concerned about the systemic violence against the Tamils under Rajapaksa
Photo: PRABHU K

In his model indictment document, Fein seeks to establish the motivational context and the processes of the genocide under the Rajapaksa regime. Detailing the charges against Gotabaya and Fonseka, the document notes that “the alleged acts or omissions were committed with specific intent to destroy, in whole or in substantial part, a national, ethnic, racial, or religious group as such, under the pretext of counter-insurgency warfare”. The document describes the victims of the alleged genocide as “Hindu-Christian Northeast Sri Lankan Tamils (HCNSLTs)”. Different forms of genocidal tactics against the HCNSLT have been recorded, among them large-scale abduction, indiscriminate aerial bombardment, artillery shell attacks and systematic deprivation of essential foods, and medicines.

The army’s powers to enforce ad hoc restrictions on “who and what goods can and cannot pass” over arterial roads to reach the HCNSLTs, media censorship on the happenings in Tamil areas, and the ban on petrol are part of Fein’s genocide charges against Fonseka and Gotabaya.

Tamils face “complex bureaucratic procedure” to travel abroad or within the country, especially in government-controlled Jaffna peninsula. “The process takes two to three months, whereby the application may be rejected. The army or government-sponsored paramilitaries are known to have murdered the applicants, the majority of whom were male.”

Fein’s priority now is to satisfy the US Department of Justice that a prima facie case has been made out and get the US Government’s support for forming a grand jury to prosecute Gotabaya and Fonseka. “I hope to have a grand jury set up in about three to four months time,” he says. If the jury indicts the accused, then the stage would be set for bringing Fonseka and Gotabaya to stand trial in the US.

Meanwhile, the situation of journalists in Sri Lanka is turning worse. Media sources in Colombo said at least 10 Sri Lankan journalists have fled the country. Senior journalist Lasantha Wikramatunga was assassinated by unknown persons in Colombo earlier this month — government hit-men are suspected. Senior Sinhalese journalist Sunanda Deshapriya has taken refuge in Chennai, where media persons have formed a forum called Journalists Against War to protest the violence on the Press under the Rajapaksa regime in Sri Lanka.

WRITER’S EMAIL
vinoj@tehelka.com
From Tehelka Magazine, Vol 6, Issue 5, Dated Feb 07, 2009

THE CURIOUS TALE OF MUMBAI TERROR
By Raveena Hansa
The Mumbai attacks need a thorough investigation Read>>

Aishwarya's political debut likely from Bihar
By Anand ST Das

Journalist Self-Immolates, Students Protest
By PC Vinoj Kumar

Only A Small Fish?
By Sanjana
More Stories>>

நன்றி தோழர் அசுரன் (http://poar-parai.blogspot.com/)

Purachi
2009-02-16 04:33:00
purachi1107@gmail.com

//இந்தக் கோரிக்கையை இந்திய அரசு தரப்பில் இலங்கையிடம் தெரிவிப்பதற்கு பிரணாப் முகர்ஜி நேரிலும் சென்றுள்ளார். அருகில் உள்ள நாடு என்கிற தன்மையில், இத்தகைய கோரிக்கையை முன்வைப்பது சரி. “இதற்கும் மேலே சென்று’’ இந்திய அரசு இலங்கையை வலியுறுத்துவது என்ற எதிர்பார்ப்பு ஒரு வித மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது” என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.//

அடப் பாவிகளா, வாய் கூசாம புளுகுறதுக்கு கம்யுனிச முகமூடியா? இந்தியாதான் பிரதானமாக் அங்க போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னிலையில் இந்தியா இதுக்கு மேலே தலையிடுவது தவறு என்று இந்திய முதலாளி வர்க்கத்தின் பக்கம் நின்று பேசும் வெட்கங்கெட்ட கட்சிக்கு கம்யுனிஸ்டுன்னு பேரு வேற.. தூ....

ஏகலைவன்
2009-02-27 11:37:00
yekalaivan@gmail.com

இளைஞர் முழக்கம் என்பது மாற்று ஊடகமல்ல, இதுவும் ஒரு பார்ப்பன ஊதுகுழல்தான் என்பதனை அம்பலப்படுத்தி மேலே பதியப்பட்டுள்ள எதிர்வினைகள் இங்கே dyfi, cpim தரப்பினரின் பதில்களுக்காக காத்திருக்கின்றன. விமர்சனங்களைப் பரிசீலிப்பதும், அதற்கு முறையான பதில்களைத் தெரிவிப்பதும் சி.பி.எம். தலைவர்களின் அகராதியிலேயே இருந்ததில்லை, இனி இருக்கப்போவதுமில்லை. எனவே, இவற்றுக்கான பதிலை நாம் எதிர்ப்பார்ப்பது வீன்வேலையே.

இருப்பினும், இதனைப்படிக்கின்ற சி.பி.எம்., டி.ஒய்.எஃப்.ஐ., அணிகள் தமது பத்திரிக்கையின் இந்த மோசடியான தலையங்கத்தையும் அதனை எதிர்த்து பதியப்பட்டுள்ள எதிர்வினைகளையும் படித்து உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். பொதுவாக இணையத்தில் எழுதுகின்ற சி.பி.எம். நபர்கள் (நம்ம கோமாளி சந்திப்பு செல்வப்பெருமாள் முதல் விடுதலை என்கிற ரமேசுபாபு, இன்னபிற தோழர்கள்....) ஏதோ வேலைப் பளு காரணமாக இவற்றுக்கு பதில்சொல்லாமல் இருந்துவிட்டதாக யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இவர்கள் இணையத்தில் தொடர்ந்து இயங்கிவருகின்றனர். இங்கே பதியப்பட்டுள்ள எதிர்வினைகளையும் நன்கறிவர். பதில்சொல்லக் கையாளாகாத நிலையில்தான் இதனைத் தவிர்க்கின்றனர்.

எப்படியிருந்தாலும், இவற்றுக்கு நேர்மையாகப் பதிலேதும் சொல்லாமல் அவர்கள் காத்துவரும் மவுனத்திற்கு நமது நன்றிகள்!

தோழமையுடன்,
ஏகலைவன்.

Paruthi
2009-03-05 10:57:00
sek_mca@yahoo.com

Hi
This is the first i am reading in this magazine. Before i heard about this somewhat.
This is article clearly shows your character. You are dead against of Tamil and even human being.
Can you India always accept tamil nadu tamil people as a indian. Then answer the question morn 400 tamily fisher man are shooted by sri lankan militry. Are you accepting this. India always against tamil & tamil speaking people.

அன்பரசன்
2009-03-07 10:39:00
anbu_76@yahoo.co.in

கீற்று வின் நிலை குழப்பமழிக்கிறது, முத்துகுமாரை போற்றி பல கட்டுரையை வெளியிட்டு, இப்போது இந்த மாதிரி கட்டுரைகளையும் வெளியிடுவது, கீற்று ஆசிரியர் குழுவிற்கு கொளகை தெளிவில்லை என்பதனையே காட்டுகிறது.

ஈழத்தமிழர் பிரச்சனையில் கீற்றுவின் நிலை என்ன?



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP