மீண்டும் நடிக்க வருகிறார் பிரபுதேவா
நடிகராக இருந்து இயக்குனராக மாறிய பிரபுதேவா மீண்டும் நடிகர் அவதாரம் எடுக்கிறார்.
நடன இயக்குனராகப் பெயர் பெற்று பின்பு கதாநாயகனாக மாறியவர் பிரபுதேவா. காதலன், ஏழையின் சிரிப்பில் உட்பட பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து சிறந்த நடிகர் என பெயர் பெற்றார்.
அதன்பிறகு மூன்றாவது அவதாரமாக இயக்குனராக மாறினார். அவர் இயக்கிய போக்கிரி படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து நடிகர் விஜய் நடிப்பில் ‘வில்லு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்தப் படம் முடிந்ததும் இயக்குனர் ரவிசக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம் பிரபுதேவா. இந்தப் படத்திற்காக இரண்டரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|