அழகான கதாநாயகன்
தமிழ் சினிமாவின் மிக அழகான கதாநாயகன் அஜீத் தான் என இயக்குனர் கவுதம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் வாரணம் ஆயிரம். இந்தப் படம் விரைவில் வெளிவர உள்ளது. அடுத்ததாக அஜீத்தை வைத்து படம் இயக்கப் போகிறார்.
இதுகுறித்து கவுதம் மேனன் கூறும்போது,
அஜீத்தை ஒருமுறை சந்தித்தபோது அவருக்கு ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது. எனவே எங்களது அடுத்த படத்தில் இருவரும் இணைகிறோம். அஜீத்தை வழக்கம்போல் அல்லாமல் வேறு மாதிரியாக இந்தப் படத்தில் காண்பிக்கப் போகிறேன். என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவின் மிக அழகான கதாநாயகன் அஜீத் தான். அதனால் அவரை காதல் கதையில் பயன்படுத்தப் போகிறேன். இந்தப் படம் அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கப்பட்டு ஏப்ரல் 14 ம் தேதி வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|